வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று


தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கிலம் மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன்னா தமிழ் என்று சொன்ன உடனே நம்ம நியாபகத்துக்கு வரத்து அதுதானே.

திருக்குறள் கி.மு.31ல் தமிழ் கடைசங்கத்தில் அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசிசங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும். திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார் ஆனால், தொல்காப்பியரோ அகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று. ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக்கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. 

சனி, 22 டிசம்பர், 2012

ஒரு கண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்பு

             


ஒரு பெண் டெல்லியில் கொடூர மனித மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட போது ஒட்டுமொத்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிகழ்வு கண்டிக்கப்பட வேண்டியதே.

ஆனால் தமிழீழத்தில் நூற்றுக் கணக்கான பெண் போராளிகளை கொடூரமான முறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கண்களை கட்டி சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது. தமிழகமே கொந்தளித்து எழுந்தது . ஆனால் அதை இந்திய பாராளுமன்றமோ, இந்திய ஊடகங்களோ கண்டு கொள்ளவில்லை.

மாறாக தமிழினத்தை அழித்த கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு இந்திய அரசு அறுசுவை விருந்தளித்து மகிழ்ந்தது. இது தானா தமிழர்களுக்கு கொடுக்கப்படும் நீதி இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால் கொந்தளிக்கும் இந்திய நாடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது ஏன் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது ? மாநிலத்திற்கான அதிகாரம் கிடைக்கும் வரை இத்தகைய அநீதி இந்திய நாட்டில் தொடரும்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

பொன்மொழிகள்

தெரியாத ஆலய தகவல்:

தெரியாத ஆலய தகவல்


                                     


தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்" கோயிலில் உள்ள "நவாங்க" மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில் இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை. ஒரு.மெல்லிய குச்சியை நுழைத்து தூணின் மறுபக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும். ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.