* புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.
* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.
* உலக நன்மைக்காக அவசியமாயின்
உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்,
தூய்மை
உடையவன் தான், நல்ல சிந்தனையாளனாக, பகுத்தரவாளனாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான்.
* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும்
நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால்
அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
பணத்தைச் சம்பாதிக்க
வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
* பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது
இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை..
பணக்காரன் ஆக
வேண்டுமா? அதற்குப் பணத்தைக்
குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்
* நியாயத்திற்கு நன்மை உறுதி
* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது
பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.
* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற
எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.
* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த
குணம், குற்றமற்ற
நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
* நியாயத்தராசை வைத்திருப்பவனின் கையில்
ஆள்பலம், சொல்வலிமை, பணம் போன்ற எல்லா நன்மைகளும் வந்து
சேரும்.
* பிச்சை எடுப்பவனிடம் மான உணர்வு
இருக்காது. உள்ள உறுதி மிக்கவன் யாரிடமும் இலவசமாக எதையும் பெற விரும்புவதில்லை.
* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு.
முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அடுத்தபடியாய் உங்களுக்கு
இறை நம்பிக்கை கூட
அவசியம் இல்லை..
உங்கள் மேல்
உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
* விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று
முடிப்பவன் அறிவாளி
* உடலை வெற்றி கொள்ள முயலுங்கள். அது
எப்போதும் நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
* அகங்காரத்தைக் களைந்தால் நல்ல
சிந்தனையும் பகுத்தறிவும் , ஞானமும் ஏற்படும்.
அகங்காரத்தைக் களைந்ததால் தான் புத்தருக்கு ஞானம் பிறந்தது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக